/

அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது: டிடிவி அணி எம்எல்ஏ சுந்தர்ராஜன் பேட்டி

டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது என அதிமுக எம்எல்ஏ சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:41 pm

DIN

சென்னை: டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்படுகிறது என அதிமுக எம்எல்ஏ சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

சென்னை டிடிவி தினகரன் இல்லத்தில் தினகரனை சந்தித்து பேசிய பின்னர் ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா இல்லாம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்பதையும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதையும் வரவேற்கிறோம் என்று கூறினார்.

அதிமுக அம்மா அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அதிமுக தொண்டர்களை யாரும் ஏமாற்ற முடியாது. 10 அல்லது 20 பேரை வைத்துக்கொண்டு யாரையும் நீக்க முடியாது என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தினால் அச்சமில்லை என்று கூறிய அவர், ஜெயலலிதா வழியில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

எம்எல்ஏக்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, சுந்தர்ராஜன், சுப்பிரமணியன், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.