தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பன்னீர்செல்வம் அணியின் எந்த நிபந்தனையும் எங்களை கட்டுப்படுத்த முடியாது: நாஞ்சில் சம்பத்

கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் கேலிக்கூத்து நடத்துகிறார்கள் என சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில்  நாஞ்சில் சம்பத்

News image
Updated On :19 ஆகஸ்ட் 2017, 5:54 am

DIN

சென்னை: கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் கேலிக்கூத்து நடத்துகிறார்கள் என சென்னையில் உள்ள தினகரன் இல்லத்தில்  நாஞ்சில் சம்பத் கூறினார்.

தொண்டர்கள் உள்பட அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரு அணிகளின் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இணைப்பு சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை. இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியை இணைக்கிறோம் என்று இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் கேலிக்கூத்து நடத்துகிறார்கள்

தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்தால், அணிகள் இடையே கடும் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அணிகள் இணைவதற்கு ஓபிஎஸ் அணி தற்போது நிபந்தனை வித்து வருகிறது என்றார்.  

வரும் 23 ஆம் தேதி ஆர்.கே. நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறுகிறது. எந்த அறைகூவலையும் எதிர்கொள்ளும் நிலையில் தினகரன் இருப்பதாவும் தெரிவித்தார்.

மேலும், வடக்கிருந்து உயிர்நீக்கக் போகிறேன் என்கிற முருகனுக்கு முதல்வரின் பதில் என்ன? என நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.