வங்கக் கடலில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ‘ஒக்கி’ புயல் தாக்கியது. அப்பொழுது குமரி மாவட்டத்தில் முறையான புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாத காரணத்தால், அதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆழ்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் புயலின் வேகத்தில் பல்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் அவர்கள் கரை சேர்ந்துள்ளனர். ஆனால் இன்னும் பெரும்பாலனோர் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்..