டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள்? அரசியல்வாதிகளைச் சாடிய இயக்குநர் பா.ரஞ்சித்! 

மீனவர்கள் குடும்பங்கள் கண்ணீரில் காத்திருக்கும் பொழுது ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசியல்வாதிகளை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:19 pm

DIN

சென்னை: மீனவர்கள் குடும்பங்கள் கண்ணீரில் காத்திருக்கும் பொழுது ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று மட்டும் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசியல்வாதிகளை இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்துள்ளார்.  

வங்கக் கடலில் கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ‘ஒக்கி’ புயல் தாக்கியது. அப்பொழுது குமரி மாவட்டத்தில் முறையான புயல் எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாத காரணத்தால், அதற்கு முன்பே மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆழ்கடலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் புயலின் வேகத்தில் பல்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் அவர்கள் கரை சேர்ந்துள்ளனர். ஆனால் இன்னும் பெரும்பாலனோர் வீடு திரும்பவில்லை என்றும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்  கோரியும் அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்..

இந்த விவகாரத்தில் கேரள அரசு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசின் செயல்பாடுகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை. ஆனால் ஆளுங்கட்சியான அதிமுக நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் தமிழக அரசியல்வாதிகள் பலரும் அங்குதான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இயக்குநர் ரஞ்சித் கடுமையான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் தெரிவித்துள்ளதாவது:

இன்னும் என்ன செய்ய போகிறது இந்த அரசு? கடலுக்குள் சென்று வீடு திரும்பாத எண்ணற்ற சகோதரர்களை எதிர்பார்த்து பெரும் வலி சுமந்து காத்திருக்கும் குடும்பத்தாரின் கண்ணீர் உங்களை ஒன்றுமே செய்யாதா?  #ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் என்ன செய்துவிடுவீர்கள்?

இவ்வாறு அவர் கடுமையாகத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.