எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரஜினியை கட்சி தொடங்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது

நடிகர் ரஜினிகாந்தை கட்சி தொடங்கும்படி யாரும் வலியுறுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.

News image
காங்கிரஸ் நிறுவனர் தினத்தையொட்டி, சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். 
Updated On :28 டிசம்பர் 2017, 9:04 pm

DIN

நடிகர் ரஜினிகாந்தை கட்சி தொடங்கும்படி யாரும் வலியுறுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் 133-ஆம் ஆண்டு தொடக்க விழா சத்தியமூர்த்திபவனில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆரம்பம் காலம் முதல் காங்கிரஸை வளர்த்த தலைவர்களின் படம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கட்சியின் கொடியை சு.திருநாவுக்கரசர் ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:-
அலைக்கற்றை வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்டது. 
இந்த வழக்கின் மீதே பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. இப்போது அலைக்கற்றை வழக்கு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். அவர்களின் கட்சிக்குள் நடைபெறும் பிரச்னை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. 
பாஜகவை அதிமுக துணிச்சலுடன் எதிர்க்கும் என்று சொல்ல முடியாது. 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இனிமேலும் அப்படித்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வரக் கூடாது. 
எனக்கு ரஜினிகாந்த் 30 ஆண்டுகால நண்பர். டிசம்பர் 31-இல் அரசியல் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார். அவரை கட்சி தொடங்கும்படி யாரும் வலியுறுத்த முடியாது என்றார். 
முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.