மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் வாகன நிறுத்த வசதி இல்லாத விடுதிகளை உடனே மூட உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2017, 7:55 am

சென்னை: சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த லோகு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் அவர் சென்னையைச் சேர்ந்த பெரும்பாலான தங்கும் விடுதிகளில் வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த பொழுது இது தொடர்பாக பலமுறை விடுதிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சற்றும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவில்லை. எனவே சென்னையில் வாகன நிறுத்த வசதிகள் இல்லாத விடுதிகளை உடனே மூட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.