புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கூவத்தூருக்கு 200 பேர் கொண்ட அதிரடிப் படை விரைந்தது!

சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 200 பேர் கொண்ட அதிரடி படை கூவத்தூரை நோக்கி விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :14 பிப்ரவரி 2017, 5:44 am

DIN

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில்  சசிகலா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 200 பேர் கொண்ட அதிரடி படை கூவத்தூரை நோக்கி விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தீர்ப்பின் பிறகு சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 10 ஆயிரம் போலீசார் பணியில் நிறுத்தபப்ட்டுள்ளனர்.

அதே நேரத்தில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள உல்லாச விடுதியை நோக்கி 50-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் 200 அதிரடி படையினர் விரைகின்றனர்.

தீர்ப்பின் பிறகு அங்கு கூடத் துவங்கிய பொதுமக்களை விலகிச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.