பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசின் மீதான அதிருப்தி உள்ளாட்சி தேர்தலில் தெரியும்: ஸ்டாலின் பேட்டி 

தமிழக அரசின் மீதான பொதுமக்களின் அதிருப்தி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 பிப்ரவரி 2017, 6:55 am

DIN

சென்னை: தமிழக அரசின் மீதான பொதுமக்களின் அதிருப்தி வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தெரியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு  நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார். அதற்காக புதுதில்லி செல்வதற்காக புறப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:    

சட்டப்பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலை தொடர்பான விபரங்களை எடுத்துரைக்கும் பொருட்டு இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்க இருக்கிறேன். தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்றுவரும் இந்த பினாமி அரசின் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி நிலவுகிறது. அந்த அதிருப்தி விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். 

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.