தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது: மத்திய பெட்ரோலியத் துறை விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது என  மத்திய பெட்ரோலியத் துறை விளக்கம் அளித்துள்ளது. 

News image
Updated On :27 பிப்ரவரி 2017, 11:27 am

புதுதில்லி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது என  மத்திய பெட்ரோலியத் துறை விளக்கம் அளித்துள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பொதுமக்கள்  மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தினசரி போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை விளக்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு கிடையாது. மிக குறைந்த நிலப்பரப்பில்தான் திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. மேலும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் 500 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த திட்டம் செயலப்படுத்தபடுவதன் மூலம் தமிழக அரசுக்கு ராயல்டி தொகையாக ரூ.40 கோடி கிடைக்கும்.அத்துடன் இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு திட்டங்கள் மூலம் விவசாயத்திற்கு எந்த விதமான் பாதிப்பும் ஏற்படவில்லை.

இவ்வாறு பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.