வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழக அரசுக்கு 'பீட்டா' அமைப்பு 'திடீர்' கடிதம்!      

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு 'பீட்டா' அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2017, 9:12 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு 'பீட்டா' அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

'பீட்டா' அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை நீக்க கோரி தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினர் நடத்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் 'பீட்டா' அமைப்பு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுமையாக அமல்படுத்த ப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியுள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் மத்திய அரசு அவசர சட்டம் எதையும் பிறப்பித்தால் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று குடியரசுத்தலைவருக்கு இந்த அமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.