அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம்: திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் எச்சரிக்கை!

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜனவரி 2017, 9:15 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டை எதிர்க்கும் 'பீட்டா' அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு நடிகர் கருணாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 'பீட்டா' அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த எதிர்ப்பு காரணமாக உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது. இந்த 'பீட்டா' அமைப்புக்கு நடிகை திரிஷா ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நடிகை திரிஷாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. இதற்காக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

எதிர்ப்பின் காரணமாக சிவகங்கை பகுதியில் நேற்று நடந்த திரிஷாவின் 'கர்ஜனை'  படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு நடிகர்  கருணாஸ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

'பீட்டா' அமைப்புக்கு ஆதரவளிக்கும் நடிகை த்ரிஷாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவிக்கிறேன். அவர் இவ்வாறு தொடர்ந்தால் அவரது படப்பிடிப்பு நடைபெறுவதை தடுத்து நிறுத்துவோம். நடிகர் சங்க துணைத் தலைவர் என்ற அடிப்படையில் த்ரிஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அடுத்த ஆண்டில் உச்ச நீதிமன்ற அனுமதியோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

நடிகர் சங்க துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கருணாஸ் த்ரிஷாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.