இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

 ஜல்லிக்கட்டு விவகாரம்: குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருடன் அதிமுக எம்பிக்கள் நாளை சந்திப்பு!

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் வலு பெற்று வரும் சூழ்நிலையில் அதிமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2017, 9:41 am

DIN

சென்னை: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் மாநிலம் முழுவதும் வலு பெற்று வரும் சூழ்நிலையில் அதிமுக எம்பிக்கள் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டில் மூன்று வருடங்களாக பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தற்பொழுது ஜலல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூன்று நாட்களாக போராடிவருகின்றனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேச வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டை நடைபெறச் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க அவசர சட்டம் நிறைவேற்றக் கோரி அதிமுக எம்பிக்கள் அனைவரும் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரை நாளை சந்நிதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் நாளை காலை 10 மணி அளவில் பிரதமரை சந்திக்க உள்ளனர். பின்னர் அவர்கள் குடியரசுத் தலைவரை சந்திப்பார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.