வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜல்லிக்கட்டு தடை நீங்கியது: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது என்று முதல்வர் பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :21 ஜனவரி 2017, 12:45 pm

DIN

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது என்று முதல்வர் பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் பேட்டியளித்த பொழுது கூறியதாவது:

ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை தற்போது சட்டப்பூர்வமாக நீங்கி விட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டமே ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வுதான். எனவே யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த அவசர சட்டமானது ஆறு மாதத்திற்கு அமலிலிருக்கும்.  சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபப்டும். எனவே ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த சட்டம் கொண்டு வரப்பப்படுவதற்கு அறவழியில் நின்று போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.