ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு: பட்டாசு உற்பத்தியாளர்கள் 4ஆவது நாளாக வேலைநிறுத்தம்

ஜிஎஸ்டி வரியை கண்டித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

News image
Updated On :3 ஜூலை 2017, 5:51 am

தினமணி

ஜிஎஸ்டி வரியை கண்டித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

பட்டாசுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.  இதை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், தி இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்டவை  மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை முன்வைத்தன. எனினும் பட்டாசுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட வில்லை. 

இதையடுத்து பட்டாசு உற்பத்தியாளர்கள்,  ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி ஜூன் 30 ஆம் தேதி முதல்  பட்டாசு ஆலைகளை மூடி காலவறையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறித்திருந்தனர். அதன் படி விருதுநகர் மாவட்டதத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும், பட்டாசு கடைகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் போரட்டம் இன்று 4ஆவது நாளை எட்டியுள்ளது. 

பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்தால் பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு,  பட்டாசு மூலப்பொருள்கள் விற்பனையாளர்கள்,  காகித அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.