உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நொடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்தார்.
கபினியில் இருந்து 3000 கனஅடியும், கேஎஸ்ஆர் அணையிலிருந்து 3000 கனஅடியும் திறக்கப்படுவதாக கூறப்பட்டது. முறையான இந்த அறிவிப்புகளுக்கு முன்பே மாண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துவிட்டன.
இந்த நிலையில், ஒரு நாளில் தண்ணீர் தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட இடைவெளியில் வறண்ட ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மெல்லத்தான் வந்து சேரும் என்றும் கூறப்பட்டது.
இதன்படி செவ்வாய்க்கிழமை இரவு பிலிகுண்டுலு வந்து சேரலாம் என தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெறும் 120 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களாகவே இதே நிலை காணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.