ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிய வேண்டும்: சட்ட அமைச்சர் சண்முகம் சாடல்! 

குறிப்பிட்ட வகுப்பு மக்களின் மனம்  புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு  நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

DIN

விழுப்புரம்: குறிப்பிட்ட வகுப்பு மக்களின் மனம்  புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு  நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்று தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அதில் பங்கேற்பாளராக உள்ள நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பயன்படுத்திய வாரத்தையொன்று குறிப்பிட்ட  வகுப்பு மக்களை அவமானப்படுத்தும்படி அமைந்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக கமலுக்கு எதிராக சில இயக்கங்கள் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தன. மேலும் அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

பின்னர் இது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் கமல் தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் சூட்டினைக் கிளப்பியது.

இந்நிலையில் மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் வந்திருந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் கமலஹாசன் பணத்திற்காக எதனையும் செய்யக்கூடியவர். தற்பொழுது கூட பணத்தின் பொருட்டுதான் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.   

குறிப்பிட்ட ஒரு வகுப்பு மக்களின் மனம்  புண்படுமபடியான கருத்துகளை வெளியிடும் ஒரு  நிகழ்ச்சியினை நடத்துவதால், நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.