நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம்..! கம்பேக் அளிப்பாரா?

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து...

News image

லால் சலாம் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். - படம்: எக்ஸ் / ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Updated On :27 பிப்ரவரி 2026, 12:45 pm IST

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா 2012-ல் ’3’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

பின்னர் அவர் 2015-ல் இயக்கிய வை ராஜா வை படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. நீண்ட காலத்துக்குப் பிறகு லால் சலாம் எனும் படத்தை 2024ல் வெளியிட்டார்.

இந்தப் படம் மிகவும் கடுமையான விமர்சனத்தைப் பெறவே, ஓடிடியிலும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் 6ஆம் தேதி கடந்தாண்டு சன்நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியானது.

தற்போது, கண்ணா ரவி தயாரிப்பில் புதிய படத்தை இயக்குகிறார் என அதிகாரபூர்வ போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொங்கல் வெளியீடாக வந்து, வெற்றிப் படமாகன தலைவர் தம்பி தலைமையில் படத்தைத் தயாரித்த கண்ணா ரவியின் கேஆர்ஜி நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

இந்தத் தயாரிப்பில் 9ஆவது படமாக உருவாகும் இதப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என போஸ்டர் வெளியாகியுள்ளது.

Summary

An announcement has been made about a new film directed by director Aishwarya Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.