சென்னை: தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று முதல்வர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வாசித்தார்.அதில் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் இரு மடங்காக உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம் தற்போதுள்ள ரூ.55 ஆயிரத்திலிருந்து, இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
அத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியானது தற்போதுள்ள ரூ.2 கோடியிலிருந்து ரூ 2.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.
மேலும் தற்பொழுது ஓய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கபப்டும் ஓய்வூதியமானது ரூ 12 ஆயிரத்திலிருந்து ரூ 20 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வானது ஜூலை ஒன்றாம் தேதி முதல்நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
விஜய் சேதுபதியின் காட்டான் டீசர்!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

