சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மத்திய அரசின் பொது விநியோகத் திட்ட அரசாணை விவரம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சலுகை பெறுபவர்கள் மற்றும் நீக்கப்படுபவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டதன் விவரங்கள்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN

மத்திய அரசு ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் பொது விநியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்படுகிறார்கள் என்று திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டது. 

இந்த அரசாணையில் வெளியிட்ட விவரம் பின்வருமாறு:

புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் சலுகை பெறுபவர்களின் விவரம்:-

நகர்ப்புறப் பகுதிகள்:

  • அனைத்து அந்நியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.
  • அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • நகர்புற ஆட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள்.
  • முதியோர் உதவித் தொகை திட்டப் பயணாளிகள் போன்ற இதர நலத்திட்டப் பயானாளிகள்.
  • விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்பத் தலைவராகக் கொண்ட அனைத்து குடும்பங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்.

கிராமப்புற பகுதிகள்:

  • அனைத்து அந்நியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.
  • அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள்.
  • முதியோர் உதவித் தொகை திட்டப் பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள்.
  • விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடுபம்பத் தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள்.
  • மாற்றுத்திறனாளிகளை (40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனம் இருக்க வேண்டும்) குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • விவசாய கூலி தொழிலாளர்களை கொண்ட குடும்பங்கள்.
  • மக்கள் நிலை ஆய்வின் கீழ் கண்டறியப்பட்ட பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள்.

புதிய திட்டத்தின் அடிப்படையில் பொதுவிநியோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்படுபவர்களின் விவரம்:-

  • வருமான வரி செலுத்தும் நபரைக் குறைந்தது ஒரு உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்.
  • தொழில்வரி செலுத்துபவர்களை உறுப்பினராகக் கொண்ட குடும்பங்கள்.
  • பெரு விவசாயிகள் (5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள்) என வகைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்.
  • மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
  • நான்கு சக்கர மோட்டர் வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்திற்கு வைத்துள்ள குடும்பங்கள் நீங்கலாக).
  • குளிர்சாதனக் கருவி வைத்துள்ள குடும்பங்கள்.
  • மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட தின்காரை, மேற்கூரை மற்றும் சுவர்களைக் கொண்ட வீடுகள்.
  • பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்.
  • அனைத்து ஆதாரங்களில் இருந்தும் பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- (ஒரு லட்சம் ரூபாய்) அதிகமாக உள்ள குடும்பங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.