ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா?: ஸ்டாலின் கிண்டல்

வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :5 ஜூன் 2017, 5:35 am

DIN

சென்னை: வைரவிழாவை கிண்டல் செய்த பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞரா என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா, மற்றும் அவரது 94-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்றது.

விழாவில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவைத் திமுக குழு தலைவர் கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வைரவிழா அல்ல வயதானோருக்கான விழா என்று கூறினார்.

இந்நிலையில், இன்று காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சென்னை - திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிக்கிறது. தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர் காயிதே மில்லத். காயிதே மில்லத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்திய அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வைரவிழா வயதானவர்கள் விழா என கூறி உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் 16 வயது இளைஞர். அவரிடம் இருந்து இதனை நான் எதிர்பார்க்கவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த விமர்சனம் வயதானவர்களையும், மூத்த குடிமக்களையும் கொச்சைபடுத்துவதைப்போல் போல் உள்ளது.

மேலும், மிருகபலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்தியை திணிக்க முயற்சிப்பது போல் தமிழையும் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.