பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தொடக்கம்

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

DIN

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரளத்தில் கடந்த மே 30-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தமிழகத்தின் அனேக இடங்களில் பரவலாகவும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில்...: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 140 மி.மீ. மழையும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் 80 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடங்கக்கூடிய சாதகமான சூழல் நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.