பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கருணாநிதியைப் பாராட்டி சிறப்புத் தீர்மானம்? பரிசீலிக்க பேரவைத் தலைவர் உறுதி

திமுக தலைவர் கருணாநிதியின் பேரவைப் பணியின் 60 ஆண்டு நிறைவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும்

News image
பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு வெளியேவரும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர்.
Updated On :7 ஜூன் 2017, 8:33 pm

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் பேரவைப் பணியின் 60 ஆண்டு நிறைவுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என பேரவைத் தலைவர் பி.தனபால் உறுதி அளித்தார்.
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் புதன்கிழமை பங்கேற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியது:
கருணாநிதியைப் பாராட்டி...: தமிழக சட்டப்பேரவை வரும் 14-ல் கூடுகிறது. கருணாநிதியின் சட்டப் பேரவைப் பணி வைர விழாவை ஒட்டி அவரைப் பாராட்டி சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது. அது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
முக்கிய மசோதாக்கள்: மானியக் கோரிக்கைகளின் மத்தியில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மானியக் கோரிக்கையின் போதே சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மீதியுள்ள மசோதாக்கள் சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றப்படும். இதுவரை என்னிடம் மசோதாக்கள் எதுவும் தரப்படவில்லை.
திமுகவுடன் ஒற்றுமை: இந்த கூட்டத் தொடர் 24 நாள்கள் நடப்பதை குறைவான நாள்கள் நடப்பதாகக் கூற முடியாது. 20 நாள்களில்கூட மானியக் கோரிக்கைகள் நடந்துள்ளன. எனவே இது சரியானது. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருமே திருப்தியாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலை அமைத்துத் தந்திருக்கிறார்கள். தி.மு.க.வினர் திருப்தியாக இதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதை அனைவருமே ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
எந்தக் கட்சியில் எத்தனை பேர்? சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், மானியக் கோரிக்கையில் எந்தக் கட்சியில் எத்தனை பேர் பேச வேண்டும் என்பதில் ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும்.
வெட்டுத் தீர்மானங்களும் தரப்பட்டுள்ளன. அதுபற்றி அந்தந்த உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவையில் தி.மு.க.வினரின் செயல்பாடு தொடர்பான பிரச்னை உரிமைக் குழுவிடம் பரிசீலனையில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.