அந்நிய செலவாணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு!
அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தொடர்ந்த அந்நிய செலவாணி மோசடி வழக்கில், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது...


சென்னை: அமலாக்கத்துறை 1996-ஆம் ஆண்டு தொடர்ந்த அந்நிய செலவாணி மோசடி வழக்கில், அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
1996-ல் ரூ.45.31 கோடி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அமலாக்கத்துறை தினகரன் மீது 2 வழக்குகளை பதிவு செய்தது. இருபது வருடங்களாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் தினகரனை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது.
மேல்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தினகரனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அத்துடன் இந்த வழக்கை தினந்தோறும் விசாரிக்க வேண்டுமென்றும் எழும்பூர் நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்தது.
அதன்படி இன்று இன்று எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. நீதின்றத்தில் நேரில் ஆஜரான தினகரன், தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அத்துடன் அவர் மீது கொடநாடு எஸ்டேட் நிறுவன பங்குகளை போலி நிறுவனம் மூலம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டவுடன் நீதிபதி மலர்வதி வழக்கு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...