ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது விபத்து: 13 பேர் காயம்

நெய்வேலியில் தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ஆக்ஸிலரி பம்ப் வெடித்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :10 ஜூன் 2017, 5:15 am

சீனிவாசன்

நெய்வேலி: நெய்வேலி நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் போது ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தனியார் நிறுவனத்தின் மூலம் நியூ தெர்மல் பவர் திட்டப் பணியின் மூலம் சாம்பல் வெளியேற்றும் நிலையம் 40X14 மீட்டர் அளவில் 10 மீட்டர் உயரத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 11 மணியளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 13 பேர் தரைத்தளத்தில் ஜல்லி போடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பணி நிறைவுபெறும் நிலையில் இருந்தபோது இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென ரூபிங் சென்டர் முட்டு சரிந்து விழுந்தது. இதில், சுமார் 15 அடி உயர்த்தில் பணியில் இருந்த 13 தொழிலாளர்கள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.

காயமடைந்த வடமாநில தொழிலாளர்கள் 8 பேர் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து அவர்களின் வசிப்பிடத்திற்கு திரும்பி உள்ளனர்.

பலத்த காயமடைந்த தங்கமணி, பழனிசாமி, பிரமோத்குமார் உள்ளிட்ட 3 பேரும் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் மட்டும் காயமின்றி அதிரிஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.