ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பண பேரம்: விவாதிக்க அனுமதிக்காதது ஏன்?: பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்

பண பேரம் தொடர்பாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க அனுமதிக்காதது ஏன் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:45 pm

DIN

பண பேரம் தொடர்பாக வெளியான விடியோ குறித்து விவாதிக்க அனுமதிக்காதது ஏன் என்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் அளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்காக எம்.எல்.ஏ.க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ குறித்து விவாதிக்க அனுமதி கிடைக்காததைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு பேரவைத் தலைவர் தனபால் அளித்த விளக்கம்: எதிர்க்கட்சித் தலைவரும், துணைத் தலைவரும் பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்துப் பேசுகின்றனர்.
சட்டப்பேரவையின் பழைய பதிவுகள்: 1972, 1985, 1996-ஆம் ஆண்டுகளில் அப்போது சட்டப்பேரவைத் தலைவர்களாக இருந்தவர்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு பேரவையில் பேசக் கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளனர். 1997-ஆம் ஆண்டு பத்திரிகைகளில் வந்த ஒரு படத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் உறுப்பினர் சி.ஞானசேகரன் அதிர்ச்சி தெரிவித்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் பத்திரிகைகளில் வந்துள்ள புகைப்படம் ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது என்றெல்லாம் கூறினார். ஆனால், அந்தப் படம் உண்மைக்கு மாறானது எனப் பிறகு தெரிய வந்தது.
2010-ஆம் ஆண்டு பேரவை முன்னவராக க.அன்பழகன் இருந்தபோது, ஒரு செய்தி தன்னுடைய காதுக்கு வந்தால்கூட அது ஒரு குற்றச்சாட்டாக வடிவம் எடுக்கிறதென்றால், அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்கிô என்று கேட்டு அறிந்த பின்னர்தான் இந்த அவையிலே சொல்ல வேண்டும். 2011-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது, பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை எல்லாம் வைத்துப் பேசுவது முறையில்லை என்றார்.
1998-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, பத்திரிகைகளில் வரும் ஹேஷியங்களை வைத்து நாம் இங்கே விவாதம் செய்வது அழகல்ல என்று தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் பேசுவது சரியாக இருக்காது. நீதிமன்றதிலும் வழக்கு உள்ளதால்தான் விவாதிக்க அனுமதி தர மறுக்கிறேன். பேரவைத் தலைவரின் தீர்ப்பு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.