மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேனி நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை: திட்ட அதிகாரி விவேக் தாடர் தகவல்!

ஊடகங்களில் வெளியானது போல் தேனி பொட்டிப்புரம் மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை.. 

News image
Updated On :15 ஜூன் 2017, 9:22 am

DIN

சென்னை: ஊடகங்களில் வெளியானது போல் தேனி பொட்டிப்புரம் மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை என்று அந்த திட்டத்திற்கான செயல் அதிகாரி விவேக் தாடர் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிப்புரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு முதலில் பொதுமக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது

இந்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாயமானது நியூட்ரினோ திட்டதிற்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.   

இந்நிலையில் நியூட்ரினோ திட்டமானது தமிழகத்திலிருந்து மாற்றப்பட உள்ளது என்றும், ஆந்திராவில் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது என்றும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்திற்கான செயல் திட்ட அதிகாரி விவேக் தாடர் செய்தியாளர்களுக்கு சில விளக்கங்களை அளித்தார். அப்பொழுது அவர் கூறியுள்ளதாவது:

ஊடகங்களில் வெளியானது போல் தேனி பொட்டிப்புரம் மலைப்பகுதியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டம் தமிழகத்திலிருந்து மாற்றப்படவில்லை.  நியூட்ரினோ திட்டதிற்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்கப்பட்டது செல்லாது என்ற பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குப் பிறகு, நாங்கள் இரண்டாவது முறையாக விண்ணப்பித்துள்ளோம். தமிழக அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம்.

மேலும் இந்த திட்டத்திற்கு நில ஒதுக்கீடு செய்வதிலும் தொடர்ச்சியாக தாமதங்கள் நிகழ்கிறது. இதனிடையே ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இந்த திட்டத்தினை செய்லபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.  

இவ்வாறு விவேக் தாடர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.