காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

டி.டி.வி. தினகரனை எதிர்ப்போர் பதவியில் நீடிக்க மாட்டார்கள்: புகழேந்தி பேட்டி

அதிமுகவில் அம்மா அணி துணைச்செயலர் டி.டி.வி. தினகரனை எதிர்த்து அரசியல் நடத்துவோர் யாராக இருந்தாலும் பதவியில் நீடிக்க முடியாது என அக்கட்சியின் கர்நாடக பிரிவு செயலர் புகழேந்தி கூறினார்.

Updated On :29 ஜனவரி 2024, 8:17 pm IST

அதிமுகவில் அம்மா அணி துணைச்செயலர் டி.டி.வி. தினகரனை எதிர்த்து அரசியல் நடத்துவோர் யாராக இருந்தாலும் பதவியில் நீடிக்க முடியாது என அக்கட்சியின் கர்நாடக பிரிவு செயலர் புகழேந்தி கூறினார்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரையில் அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு செங்கோல் வழங்கி அவரது அரசியல் பயணத்தை தொடங்கிவைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வான செங்கோல் வழங்குதலை நினைவுகூரும் வகையில் எம்.ஜி.ஆரிடமிருந்து ஜெயலலிதா செங்கோல் பெறுவது போன்ற வெண்கலச் சிலையை மதுரையில் நிறுவ கட்சித் தொண்டர்கள் விருப்பப்படுகின்றனர். ஆகவே சிலை அமைக்கத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்சியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனை கட்சிப் பணியிலிருந்து விலக்கிவைப்பதில் சில அமைச்சர்கள் தீவிரம் காட்டுவதாக வரும் செய்திகள் நம்பத்தகுந்தவை அல்ல. ஆனால், அப்படி யாராவது நினைத்தால் அவர்கள் பதவியில் நீடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.