டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் துறைத் தலைவர் எஸ்.பாகுலேயன் தம்பி கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
வட ஆந்திர கடலோர பகுதியிலிருந்து, தென் தமிழக கடலோர பகுதி வரை நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதுபோல் வெப்பச் சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் திண்டிவனம், வந்தவாசி, உத்திரமேரூரில் 70 மி.மீ., மரக்காணத்தில் 50 மி.மீ., காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை விமான நிலையம் - 40 மி.மீ., வேலூரில் 27 மி.மீ., மதுரையில் 21 மி.மீ., திருத்தணியில் 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர், சென்னை நுங்கம்பாக்கம், நாகை, கடலூர், கொடைக்கானல், வால்பாறை, திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது
காற்றழுத்தத் தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் என்றார் அவர்.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):

பாளையங்கோட்டை 101
சேலம் 100
சென்னை 94

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.