புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தில் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை

நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையின் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :28 ஜூன் 2017, 3:51 am

DIN

நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையின் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில், 20 வாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.