3 சின்னங்கள், 3 கட்சிப் பெயர்கள்: சசிகலா, பன்னீர்செல்வம் தரப்பு சமர்ப்பிப்பு
3 சின்னங்கள் மற்றும் 3 கட்சிப் பெயர்களை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று காலை சமர்ப்பித்துள்ளனர்.


புது தில்லி: 3 சின்னங்கள் மற்றும் 3 கட்சிப் பெயர்களை சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் இன்று காலை சமர்ப்பித்துள்ளனர்.
அதிமுக கட்சிப் பெயரும், இரட்டை இலைச் சின்னமும் முடக்கப்பட்டதை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தரப்பினர் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களையும், 3 கட்சிப் பெயர்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, பேட், தொப்பி, ஆட்டோ என 3 சின்னங்களில் ஏதேனும் ஒன்றையும், அதிமுக அம்மா கட்சி என்ற பெயரையும் அளிக்குமாறு சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போல, 3 சின்னங்கள், 3 கட்சிப் பெயர்களை பன்னீர்செல்வம் தரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...