மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெரீனா கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்

மெரீனா கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
Updated On :29 மார்ச் 2017, 9:14 am

DIN

சென்னை: மெரீனா கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லி ஜந்தர்-மந்தரில் 16 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று கொடூரம் பாம்புக் கறி தின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெரீனாவில் போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து மெரீனா கடற்கரையில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மெரீனா கடற்கரையில் கூடிய 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென்று கடலில் இறங்கி விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பியும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் குரல் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இளைஞர்களை கைது செய்து வருகின்றனர். போலீஸார் கடலில் இறங்கி வருவதைத் தொடர்ந்து இளைஞர்கள் கடலின் உள்பகுதியை நோக்கி செல்கின்றனர்.

Story image

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் மீனவர்கள் உதவியுடன் இளைஞர்களை மீட்கவும் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.

கடலில் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்கள், தமிழக விவசாயிகளின் தற்கொலையை தடுக்கம் வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசினை பெரியளவில் போராட்டம் நடத்தப்படும். கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை என இளைஞர்கள் குற்றச்சாட்டினர்.

இச்சம்பவம் அனைவரும் மத்தியிலும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Story image

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் இன்று காலை முதல் தொடங்கி உள்ளது.

தற்போது சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.