மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: போலீஸ் காவலில் இருந்த இருவர் கேரள சிறைக்கு மாற்றம்

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த இருவர், மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

News image
Updated On :5 மே 2017, 7:47 pm

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த இருவர், மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவாகவுள்ள மற்றொரு குற்றவாளி குறித்தும், கூடலூர் சோதனைச் சாவடியில் கொள்ளையர்களிடம் கையூட்டுப் பெற்று 4 குற்றவாளிகளைத் தப்ப விட்ட காவல்துறையினர் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏப்ரல் 23-ஆம் தேதி நள்ளிரவில் காவலாளி ஒம் பகதூரைக் கொலை செய்துவிட்டு, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் அறைகளை உடைத்து உள்ளேயிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த சூழலில், காவல்துறையினரின் விசாரணை, நிர்வாக வசதிகளுக்காக தற்போது இவ்வழக்கு கோத்தகிரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக கேரள மாநிலம், மலப்புரத்தில் கைது செய்யப்பட்ட ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி ஆகிய இருவரும் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், போலீஸாரின் விசாரணைக்காக 3 நாள்களுக்கு நீலகிரி மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையையடுத்து இவர்கள் இருவரும் கோத்தகிரி நடுவர் நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவர் ஸ்ரீதர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கேரள மாநிலம், மஞ்சேரி சிறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனிடையே, 11 பேர் தொடர்புடைய இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள ஒருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, கூடலூர் சோதனைச் சாவடியில் ஏப்ரல் 14-ஆம் தேதி நிகழ்ந்த வாகனத் தணிக்கையில் கொடநாடு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை நேரடியாகப் பார்த்ததோடு, அவர்களை அங்கிருந்து தப்பவிட்ட காவல் துறையினர் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.