தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து! மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தில்லி பயணம்

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

News image

புதுதில்லி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள்.

Updated On :19 மே 2017, 2:45 am IST

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் வியாழக்கிழமை புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 42 நாள்கள் புதுதில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அகில இந்திய அளவில் அனைத்து மாநில விவசாய சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க புதுதில்லியில் மே 21 ஆம் தேதி அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு, பொதுச் செயலர் மன்னார்குடி பழனிவேல், செயலர் முருகன், துணைத் தலைவர் கிட்டப்பா ரெட்டி உள்ளிட்ட 15 விவசாயிகள் திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தில்லியில் 21 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவதா அல்லது லட்சம் விவசாயிகளைத் திரட்டி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதா என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.