திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தில்லி பயணம்

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்

News image

புதுதில்லி கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்ற தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள்.

Updated On :19 மே 2017, 2:45 am IST

புது தில்லியில் மே 21ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் வியாழக்கிழமை புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தேசிய நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 14 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை 42 நாள்கள் புதுதில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், அகில இந்திய அளவில் அனைத்து மாநில விவசாய சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க புதுதில்லியில் மே 21 ஆம் தேதி அகில இந்திய அளவிலான விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. அய்யாக்கண்ணு, பொதுச் செயலர் மன்னார்குடி பழனிவேல், செயலர் முருகன், துணைத் தலைவர் கிட்டப்பா ரெட்டி உள்ளிட்ட 15 விவசாயிகள் திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்றனர்.
தில்லியில் 21 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் 26 மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவதா அல்லது லட்சம் விவசாயிகளைத் திரட்டி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதா என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.