2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தில்லி பயணம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :22 மே 2017, 1:59 pm

DIN

புதுதில்லி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வேளையில், கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பெரும் முயற்சியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மதியம் தில்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக நாளை மறுநாள் (புதன்கிழமை) அன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் பெறுவது தொடர்பாக அவர் தில்லி செல்ல உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.