டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: அடுத்த 3 நாள்களில் தமிழகத்திலும் மழை

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக பொழியும் காலத்தைவிட இரண்டு நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக பொழியும் காலத்தைவிட இரண்டு நாள்கள் முன்னதாகவே தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழையானது கேரளத்தில் ஜூன் மாதம் 1-ஆம் தேதி தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு இந்தப் பருவமழையானது சற்று தாமதமாக ஜூன் 8-ஆம் தேதியன்று தொடங்கியது.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை சற்று முன்னதாக செவ்வாய்க்கிழமையே (மே 30) தொடங்கியது. கேரளத்தின் கண்ணனூர், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழை, எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
கேரளம் மட்டுமன்றி நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை பெய்தது. வங்கதேசத்தில் மோரா புயல் செவ்வாய்க்கிழமை கரையைக் கடந்ததன் காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தாலேயே தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழையின் தாக்கமாக கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் ஓரிரு தினங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியிருப்பதால் கேரளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில்...: இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினாôó. இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்கியது.
அந்த மாநிலத்தின் அநேக இடங்களில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் தமிழகம் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. மோரா புயல் செவ்வாய்க்கிழமை (மே 30) காலை 6.30 மணியளவில் வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.