மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி
Updated on
1 min read

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிளாளிகளான பார்த்திபன் மகள் பாவனா (10), மூர்த்தி மகள் யுவஸ்ரீ (8) ஆகியோர் புதன்கிழமை பிற்பகலில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவரின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து சம்மந்தப்பட்ட மின் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com