நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

நாகையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை காலை சிறைபிடிக்கப்பட்டனர்.
Updated on
1 min read

நாகையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் வியாழக்கிழமை காலை சிறைபிடிக்கப்பட்டனர்.
நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை, திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் கோபால் மனைவி கிருஷ்ணவேணி (26). இவருக்குச் சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கோபால் (30), தமிழ்ச்செல்வன் (33), சிவநாதன் (35), சின்னையன் (34), பிரசாத் (30), நவீன் (20), ராமு (20), காளியப்பன் (50), கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த அறிவழகன் (33), ஜெயராமன் (55) உள்ளிட்ட 10 பேர் கடலுக்கு மீன்பிடிக்க நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை (நவ. 13) அதிகாலை புறப்பட்டனர்.
இந்த நிலையில், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைச் சுற்றி வளைத்து, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சிறைபிடித்துச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com