தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் அறிமுகமாவது எப்போது?

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவுப் பேருந்து சேவையில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 9:05 am


சென்னை: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவுப் பேருந்து சேவையில் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் கடந்த ஜூலை மாதம் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் போக்குவரத்துக் கழகத்தில் மல்டி-ஏக்ஸல் ஏசி வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆன நிலையில், தமிழகத்தில் தற்போதுதான் இது குறித்த அறிவிப்பே வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சுமார் 200 ஏசி லக்ஸரி பேருந்துகளை ரூ.42 கோடி செலவில் கட்டித்தர டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில் 60 பேருந்துகளில் கழிவறை வசதியும் இருக்கும். திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றால் வரும் ஜூலை மாதத்தில் தமிழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட கொண்ட பேருந்துகள் இயங்கும்.

இதில், மேற்சொன்ன 60 பேருந்துகளும் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்  குளிர்சாதன வசதியுடன் படுக்கை வசதி கொண்ட 40 பேருந்துகள் ரூ.8 கோடி செலவில் கட்டமைக்கப்படுகிறது.

இதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் பேருந்துகள் தயாரிப்புப் பணி தொடங்கும் என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

எஸ்இடிசியில் சில குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தமிழகத்தில் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை தனியார் நிறுவனங்களே இயக்கி வருகின்றன.

புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் 22 பணிமனைகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,035 விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.