சிஎஸ்கே நிர்வாகம் தனது அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரிக்காக வெளியிட்ட பதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார். இந்தச் சூழ்நிலையில் இருந்தும் நேற்று (ஏப்.23) வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கினார்.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 207/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், முகேஷ் சௌதரி மும்பையில் தொடக்க வீரர் டி காக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் இந்த வெற்றியை முகேஷ் சௌதரிக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
போட்டியின்போது முகேஷ் சௌதரி குறித்து சிஎஸ்கே நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருந்ததாவது:
சில தருணங்கள் போட்டியை விடப் பெரியது.
வார்த்தைகளால் சொல்ல முடியாத இழப்புக்குப் பிறகு, விளையாட வந்தது உங்களது மன வலிமையைக் காட்டுகிறது. இன்று ஒரு கிரிக்கெட்டராக மட்டுமே விளையாடவில்லை, மகன் தனது அம்மாவுக்காக விளையாடுகிறான்.
ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு பந்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சிஎஸ்கே அணி, ரசிகர்கள் என அனைவரும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். பலம், பிரார்த்தனைகள், மஞ்சள் நிறம் எப்போதுமே முகேஷ் எனக் கூறியுள்ளது.
Some moments are bigger than the game.
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2026
Walking out to play, carrying a loss no words can hold, you show what heart truly means. Not just a cricketer today, but a son playing for his mother.
Every step, every ball, we stand with you.
The team, the fans, all of us, right beside⦠pic.twitter.com/8XkaUM15LB
Summary
Some moments are bigger than the game csk special post for Mukesh Choudhary mother lose
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ட்ரோஜன் போர்: ஒடிசி பட கதாபாத்திரங்களாக சிஎஸ்கே வீரர்கள்!

ஃபிளெமிங் விலகல்: சிஎஸ்கே அணிக்கு ஆலோசகராகும் தோனி?

ஃபிளெமிங் விலகினார்; முடிவெடுத்த சிஎஸ்கே: அடுத்த பயிற்சியாளர் யார்? | CSK | Stephen Fleming |

மும்பையில் கனமழை: முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு வாகனம் முன் விழுந்த மரம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



