சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் சௌதரியின் தாயார் காலமானார் என்ற செய்தி வெளியாகி சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
வான்கடே திடலில் இன்றிரவு மும்பை இந்தியன்ஸ் அணியும் சிஎஸ்கே அணியும் பலப்பரீட்சை செய்யவிருக்கின்றன. இதில் வெல்லும் அணி பிளே ஆப்ஸுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிஎஸ்கே அணியில் முகேஷ் சௌதரி கடந்த போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில், அவரது தாயார் பிரேம் தேவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த ஓராண்டாக மும்பையில் டாடா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இறப்புச் செய்தி தெரிய வந்ததும் அணியில் இருந்து முகேஷ் சௌதரி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக தோனி மருத்துவமனைக்குச் சென்று முகேஷ் சௌதரியின் தாயாரைப் பார்த்து குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். தற்போது, சிஎஸ்கே நிர்வாகம் பிரேம் தேவிக்கு தங்களது அஞ்சலியை தெரிவித்துள்ளது.
Summary
The CSK family mourns the passing of Mukesh Choudhary’s mother.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பதவியேற்பில் தன்னைப்போலவே இருந்தவர் யார்? சிஎஸ்கே வீரர் விளக்கம்!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

அம்மாவுக்காக விளையாடிய மகன்..! சிஎஸ்கே பகிர்ந்த முகேஷ் சௌதரிக்கான பதிவு!







