மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடிசை மாற்று வாரிய வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அதிரடி பிறப்பித்துள்ளது

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:14 pm

DIN

சென்னை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

சென்னை ஒட்டேரி பகுதியில் நீர்வழிப் பாதையினை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவர்களை காலி செய்ய சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் சார்பில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கானது இன்று உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக 177 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் 75 பேர் மட்டுமே அங்கு குடியேறி இருப்பதாகத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அந்த வீடுகளை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டால் அந்த பயனாளிகளின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். அத்துடன் ரத்து செய்யப்பட்ட ஒதுக்கீடானது வேறு ஒரு பயனாளிக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.