கோவை: கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் பார்த்து ஆறுதல் அளிக்கச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல்துறையினருக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தை அடுத்து, மருத்துவமனையில் உள்ள டெங்கு நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.