மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெரா வழக்கில் தினகரன் மனு: உச்ச நீதிமன்றத்தின் ஆச்சரியமும் எச்சரிக்கையும்

அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2017, 8:00 am

DIN

புது தில்லி: அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையினரால், இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டன. இதில், பெரா வழக்கு உட்பட 2 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் பெரா வழக்கை துரிதமாக விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுவாக ஒரு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரித்தான் மனு தாக்கல் செய்யப்படும். முதல் முறையாக விரைவாக விசாரிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்நிய செலாவணி மோசடி வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டாம் என்று கூறியதோடு, இதுபோன்ற மனுவை இனி தாக்கல் செய்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

அதோடு, இந்த மனுவை நீங்களே திரும்பப் பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்யட்டுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உடனடியாக மனுவை திரும்பப் பெறுவதாக தினகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதை அடுத்து மனு திரும்பப்பெறப்பட்டது.

தினகரன் மீதான இந்த அந்நியச் செலாவணி வழக்கு மீது கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.