திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

'நீட்'க்கு எதிரான போராட்டங்களுக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு

நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 8:58 pm

DIN

நீட்' தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க கோரும் மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். 
அதில், 'நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கை தமிழக அரசு பேணிகாக்க உத்தரவிட வேண்டும். மேலும், நீட் தேர்வுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சட்ட விரோத போராட்டங்களை நடத்தவோ, மனிதச் சங்கிலி, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவற்றை நடத்தவோ மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) இணையாக, மாநில அரசின் பதினொன்று, பன்னிரண்டு ஆகிய வகுப்புக்களுக்கானப் பாடத் திட்டத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தலித் மாணவி எஸ். அனிதாவின் தற்கொலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்குரைஞர் ஜி.எஸ். மணி புதன்கிழமை ஆஜராகி, 'தமிழகத்தின் சட்ட ஒழுங்குச் சூழலைக் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், 'அவசர வழக்காக விசாரிக்க முடியாது' எனக் கூறி மறுத்துவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.