மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அமைதியாகப் போராடலாம், சட்டம்-ஒழுங்கு பாதித்தால் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்

சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் அமைதியாகப் போராடலாம் என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 2:36 pm

DIN

நீட் தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காமல் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக தற்பொழுது தமிழகம் முழுவதும்  'நீட்' தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க கூடாது என்று கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அதில், தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சாலை மறியல், கடை அடைப்பு உட்பட பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டது.

மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், அமைதியான முறையில் போராடுவது அடிப்படை உரிமை. அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். அந்தப் போராட்டங்களினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.

இவ்விவகாரத்தின் போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு பிரச்னைகள் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.