நாளை சசிகலாவுடன் மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்திப்பு!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, அந்த அணியின் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை சந்திக்க உள்ளதற்காக தகவல்கள் வெளியாகியுள்ளது.


பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, அந்த அணியின் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை சந்திக்க உள்ளதற்காக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை வைத்துள்ள அவர்கள் முதலில் புதுச்சேரியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து இடம்மாறி தற்பொழுது கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் மூன்று எம்.எல்.ஏக்கள் நாளை காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவை, சந்திக்க உள்ளதற்காக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த அணியின் தங்க தமிழ்செல்வன், கதிர்காமன் மற்றும் மாரியப்பன் கென்னடி ஆகிய மூவரே நாளை காலை சசிகலாவை சென்று சந்திக்கவுள்ளனர் என்று தெரிகிறது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...