ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

துப்பறிவாளன் படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை

விநியோக உரிமை தொடர்பான வழக்கில், நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:53 pm

DIN

விநியோக உரிமை தொடர்பான வழக்கில், நடிகர் விஷாலின் 'துப்பறிவாளன்' திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த திரைப்படத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் பகுதிகளின் விநியோக உரிமை, ரூ. 55 லட்சம் பெற்றுக் கொண்டு தருமபுரியை சேர்ந்த டி.என்.சி. சினி ஸ்கீரின்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர் இந்தப் படத்தின் முழுமையான விநியோக உரிமையை நடிகர் விஷாலின் 'விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி'-க்கு கொடுக்கப்பட்டதால், தாங்கள் கொடுத்த ரூ. 55 லட்சத்தை திருப்பி தரக் கோரி டி.என்.சி. நிறுவனம் கேட்டது.
படத்தை வியாழக்கிழமை (செப்.14) வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ள நிலையில், விஷாலின் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, டி.என்.சி. சார்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி, சென்னை 5 -ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, டி.என்.சி. நிறுவனத்துக்கு வியாழக்கிழமை (செப்.14) காலை 10.30 மணிக்குள் ரூ. 25 லட்சம் தரத் தயாராக இருப்பதாகவும், 18 திரையரங்குகளில் மட்டும் வெளியிடும் உரிமை தருவதாகவும் விஷால் பட நிறுவனம் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, உத்தரவாதம் அளித்தப்படி வியாழக்கிழமை (செப்.14) காலைக்குள் பணம் கொடுக்கப்படாவிட்டால், படத்தை வெளியிடக் கூடாது என்ற தடை அமலாகும் எனத் தெரிவித்து, வழக்கை செப்டம்பர் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.