தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2017, 8:48 am

DIN


கரூர்: வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகாரை அடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரம் காட்டினர். இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவரின் கரூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், உறவினர்களின் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.