மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல், நாகை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாக்களில் அதிகமான கூட்டத்தைக் காட்டுவதற்காக அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள், அவர்களின் பெற்றோர்களின் அனுமதியைப் பெறாமல், விடுமுறை தினங்களில்கூட வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு மாணவர்களை அழைத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி, மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.