தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்றாண்டு உறுப்பினராக இருந்தால் வீடுகட்ட கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்பத்தூர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் கேசவராவ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக இருந்து வரும் நபர்கள் வீடு கட்டத் தேவையான நிதியை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன்படி வீடு கட்ட, அல்லது கட்டிய வீட்டை வாங்குதல் போன்றவறுக்காக தங்களது பி.எஃப். நிதியை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 044-26350080,26350110,26350120 அல்லது sro.ambattur@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வி.எஸ்.எஸ்.கேசவராவ் தெரிவித்துள்ளார்.